30 December 2008

வருடத்தின் கடைசி பதிவு

மிஸ்டர். மொக்கை ஒரு விபத்தில் சிக்கினார்.

தன்மீது மோதி படுகாயப்படுத்திய போக்குவரத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அன்று நீதிமன்றத்தில் மொக்கையின் வழக்கு கேட்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போக்குவரத்து நிறுவனம் ஒரு பிரபல வழக்குரைஞரை நியமித்திருந்தது. குறுக்கு விசாரணைக்காக, பாதிக்கப்பட்ட மொக்கையை போ.நி. வழக்கறிஞர் கூண்டிலேற்றி விசாரிக்கிறார்.. இதுதான் இன்றைய காட்சி.

வழக்கு : விபத்து நடந்த உடனே நிகழ்விடத்துக்கு வந்த காவலர்களிடம் "நான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.." என்று சொன்னீர்கள் அல்லவா..?

மொக்கை : அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.. நானும் என் அன்புக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும்...

வழக்கு : (இடைமறித்து) எனக்கு அந்த விபரமெல்லாம் வேண்டாம்.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொன்னீர்களா இல்லையா..?

மொக்கை : நிகழ்வு நாளன்று நானும் என் கழுதை கல்யாணியும்..

வழக்கு : (குறுக்கிட்டு... நீதிபதியை நோக்கி..) கனம் கோர்ட்டார் அவர்களே.. விபத்து நடந்தவுடன் வந்த காவலர்களிடம் இவர் தனக்கு எதுவும் ஆகவில்லையென்று கூறியிருக்கிறார். இப்போது தீயநோக்கத்தோடு வழக்கு தொடர்ந்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறார். உடனே இவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.

நீதிபதி : பொறுங்கள்.. எனக்கு அவர் கல்யாணிக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறது. மிஸ்டர்.மொக்கை.. நீங்கள் உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்..

மொக்கை : நன்றி நீதிபதி அவர்களே.. அன்று நானும் என் பாசத்துக்குரிய கழுதை பஞ்சகல்யாணியும் சாலை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வாகனம் எங்களை மோதி தூக்கி எறிந்துவிட்டது. நாங்கள் சாலையில் பக்கத்துக்கொருவராக விழுந்தோம். எனக்கு கையிலும் காலிலும் எலும்பு முறிவு. மூன்று பற்கள் விழுந்துவிட்டன. மூக்கு நசுங்கி ரத்தம் பீறிட்டது. சாலையின் அந்தப்பக்கம் விழுந்து கிடந்த கல்யாணி, பாதி உடல் நைந்துபோய் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.

தற்செயலாக அங்கு வந்த காவல் அதிகாரி, முதலில் கழுதையைப் போய்ப்பார்த்தார். அதன் அவஸ்தையைக் காணச் சகியாமல், துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டார். அடுத்து என்னைப் பார்த்து,"உனக்கு என்ன ஆயிற்று..?" என்று கேட்டார்.. அந்தச் சூழ்நிலையில் நான் வேறு என்ன சொல்லியிருக்க முடியும் யுவர் ஆனர்..?"

08 December 2008

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

மொக்கை மனித வள அலுவலர். இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மொக்கை.

போய்ப் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.

மகிழ்ந்த மொக்கை, திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.

மறுநாள்.. நரகம்..!

எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மொக்கை பரிதாபமாகக் கேட்டார்..

"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"

பதில் உடனே வந்தது,,,

இல்லை.. நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் செய்தோம்.. இன்று முதல் நீ எங்கள் பணியாள்..!

நன்றி அரசர் நகைச்சுவை

05 December 2008

நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் ......

மொக்கை : உண்மையைச் சொல்லு.. நிஜமாவே நீ என்னைத்தானே காதலிக்கிறே..?

காதலி : ஆமாம் மொக்கை.. நேத்திக்குதான் உன் வகுப்புல இருக்கற பயலுக்கெல்லாம் லவ் லட்டர் கொடுத்தேன் .. ஒரு நாதாரியும் பதில் அனுப்பல..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


ஒரு குளத்தில் நாலு யானைகள் நீச்சல் அடிச்சு கும்மாளம் போட்டுச்சுங்க. நம்ம சின்னா தண்ணிக்குள்ள டைவ் அடிச்சு முழுகிப் போய், யானைகளோட கால்களை எண்ணினான்..
மொத்தம் 12 தான் இருந்துச்சு.. எப்படி..?


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


கிரிக்கெட்டுல எந்த நாட்டு வீரர்களுக்கு "ஃபுட் வொர்க்" சூப்பரா இருக்கும்..?

இந்தியாதான்.. பேட்டிங் போறதும், அவுட் ஆகி, பெவிலியன் திரும்பறதும்ன்னு, சுறுசுறுப்பா இருப்பாங்கல்ல..!


ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?

நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!

நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!

(ஐயோ.. பூவு கண்ணுல இந்த ஜோக் மாட்டாம இருக்கணுமே..! )

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்


அப்புறம் அந்த ஆனைக் கேள்விக்கு விடை..

ஒரு யானை மட்டும் பேக் ஸ்ட்ரோக் போட்டுகிட்டு இருந்துச்சு..!

ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

02 December 2008

துணுக்குகள்...

மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"

_______________________________________________________________


அந்த காலத்துல, ஞானிகளும், முனிவர்களும் பசி தூக்கம் பாராமல், பச்சைத்தண்ணி குடிக்காமல், குடும்பத்தக்கூட நெனைக்காம, சிரிப்பு கொண்டாட்டம் இல்லாம தவம் இருப்பாங்க..

இப்பவும் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க.. அவங்க பேரு..

மென்பொருள் பொறியாளர்கள்..!

_______________________________________________________________


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

_______________________________________________________________

ரொம்ப லவ் ஏன் ஃபெயிலியர் ஆகுது தெரியுமா..?

ஒரு ஆளு அதிகமான அளவுல காதலிச்சாலும்,
இன்னொரு பார்ட்டி, அதிகமான ஆளுகளைக் காதலிக்கிறதுனாலதான்..!

நன்றி அரசர் நகைச்சுவை

30 November 2008

துணுக்குகள்....

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"

--------------------------------------------

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?"

"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!"

---------------------------------------------

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"

"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."

----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"

---------------------------------------------

28 November 2008

இது வேலைக்கு ஆகாது...!

மூன்று ஜோடிகள் சொர்க்கத்தின் வாயிற்கதவைத் தட்டினர்.. வாயிற்காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..

முதல் ஜோடியில் ஆண் : நாங்கள் உள்ளே போகலாமா..?

வாயிற்காவலன் : கூடாது.. நீ வாழ்நாள் முழுதும் மண்ணாசை பிடித்துத் திரிந்தாய்.. மேலும் நீ மருதன் என்று நிலத்தின் பெயரையே கொண்டிருக்கிறாய்.. திரும்பிப் போ..!

2வது இணையில் ஆண் : நாங்களாவது........?

வாயிற்காவலன் : இயலாது.. முதல் ஜோடியாவது பரவாயில்லை.. நீ பொன்னாசை வெறி பிடித்து அலைந்தவன்.. மேலும் உன் பெயர் முத்தன். போ... போ..!

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது ஜோடி பெண் தன் ஆண் இணையைப் பார்த்து சொன்னாள்..

"சுக'ந்தா..! இது வேலைக்கு ஆகாது.. வா.. போவோம்..!"

நன்றி அரசர் நகைச்சுவை

25 November 2008

மிஸ்டர்.மொக்கை..!

மிஸ்டர்.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..

"என்னா மேன்.. உன் மிசஸ் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!

மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
______________________________________________________________

மொக்கையின் நண்பர் : அந்தக் கட்சிப் பத்திரிகையில் வேலை செய்துகிட்டு இருந்தியே.. இப்போ திடீர்ன்னு நிறுத்திட்டாங்களாமே.. என்ன ஆச்சு..?

மொக்கை : 'தலைவர் பதிலளிக்கிறார்'ன்னு அச்சுக் கோக்கறதுக்கு பதிலா, 'தலைவர் பல்லிளிக்கிறார்'ன்னு கோத்து தொலச்சிட்டேன்..!

22 November 2008

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

நன்றி அரசர் நகைச்சுவை

20 November 2008

பெரிசா தைச்சுடாதீங்க....

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

18 November 2008

வாயில்லா ஜீவன்..!

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

நன்றி அரசர் நகைச்சுவை